Thursday, July 5, 2012

மின்சாதனங்கள் இணைப்பு முறை

பல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் இணைப்புக்கள் இரணடு வகைப்படும் அவை

பேரல்லஸ் முறையில் மின்சாதனங்கள்

ஒருசோர்ஸின் இரு முனைகளிலும் மின்சாதனங்கள் இரு முனைகளையும் இணையாகவே இணைக்கும் முறையைத்தான் பேரல்லஸ் இணைப்பு முறை என்கிறோம்.  ஒரு இணைப்பை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் 100 வோல்ட், 1000 மில்லி அம்பியர் கொடுக்ககூடிய சோர்ஸ் (மின்கலம்) எனக்கொள்ளலாம். இதிலிருந்து வெளிவரும் இருமுனைகளின் கடைசி வரை 100 வோல்ட் மின்னழுத்தம் இருக்கும்.

ஆகவே அதில்
100V 50MA  பல்ப்
100V 100MA ரேடியோ
100V 200MA மின்விசிறி
100V 500MA அயன் பொக்ஸ்
100V 100MA பல்ப்2  ஆகியவற்றை இணைக்கலாம்.

இப்படி இணைக்கும் போது இணைக்கும் சாதனங்கள் 100 வோல்டில் இயங்கும் சாதனங்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த சாதனங்கள் எடுக்கும் அம்பியரின் அளவு வெவ்வேறாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம்.  இங்கு 950 மில்லி அம்பியர்  லோட் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இதற்கு மேலாக லோட் எதுவும் இணைக்கக் கூடாது. இணைத்தால் மின்கலம் விரைவாகக் கெட்டுவிடும்.
நமது வீடுகளிலெல்லாம் மேலகாட்டப்பட்ட முறையில்தான் இணைப்புக்கொடுப்பார்கள்.  வீடுகளில் இணைக்கும் சாதனங்கள் எல்லாம் 230 வோல்ட் மின்னழுத்தத்தில் வேலைசெய்யக் கூடியனவாகவும் ஆனால் வெவ்வேறு அம்பியர்களை எடுக்கக் கூடியனவாகும் இருக்கும். எல்லா சாதனங்களும் எடுக்கும் அம்பியரின் அளவைப்பார்த்தால் மீட்டர் வினியோகிக்கும் அம்பியர் அளவின் 90% வரை இருக்கலாம். (மின்சார நிலையத்திலிருந்து கிடைக்கும் சிங்கிள் பேஸ் கரண்டில் 40 அம்பியர் கிடைக்கிறது)


Wednesday, July 4, 2012

ஓம்ஸ் விதி Ohm's Law

ஒரு நீர்த்தொட்டியில்  1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி நேரத்தில் 50லீட்டர்  அல்லது 100 லீட்டர் என்ற அளவில்தான் விழும். இப்படு விழும் தண்ணீரின் அளவு தரை மட்டத்திலிருந்து தொட்டி அமைந்திருக்கும் உயரம், நீர் செல்லும் குழாயின் பருமன், நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அதுபோல  ஒரு மின்கலததில் 50 அம்பியர் கரண்ட் உள்ளது என்றால் இணைப்பை இணைத்ததும் அவ்வளவு கரண்டும் அப்படியே வந்துவிடாது அதில் 10, 20 அல்லது 30 அம்பியர் மின்னோட்டம் தான் பாயும். இப்படியாக ஓடும் மின்னோட்டத்தின் அளவு எவ்வளவாக இருக்கும் என் நிர்னயிக்க கூடிய  விதிதான் ஓம்ஸ் விதி எனப்படுகிறது. "சர் ஜார்ஜ் சௌமன் ஓம்" என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனால் இந்த விதிக்கு அவர் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. இது உலகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

ஒரு மின் சர்கியூட்டில் ஓடும் மின்னோட்டத்தின் அளவு மின்கலம் வினியோகிக்கும் மின்னழுத்தமாகிய ஓல்டிற்கு நேர் விகிதாசாரத்தில் அமையும். அதாவது மின்னழுத்தம் கூடக் கூட மின்னோட்டமும் அதிகரிக்கும். இரண்டாவதாக இணைக்கப்படும் லோடின் ரெஸீஸ்ரன்ஸ் (ஓம்ஸ்) இற்கு ஏற்ப எதிர் விகிதாசாரமாக அமையும். அதாவது ரெஸீஸ்ரன்ஸ் அதிகமாக ஆக மின்னோட்டத்தின் அளவு குறையும்.  நீங்கள் சைக்கிளில் போகும் பொழுது அதன் வேகம் நீங்கள் கொடுக்கும் பெடலிங் செய்யும் அளவிற்கு ஏற்ப குறையும் அல்லது கூடும்.  எதிர் கற்றின் வேகத்திற்கு ஏற்ப சைக்கிளின் வேகம் குறையும் அல்லது கூடும். நேர் விகிதாசாரம் என்றல் பெருக்க் வேண்டும் எதிர் விகிதாசாரம் என்றால் பிரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
 மேலே கொடுக்கப் பட்ட படத்தில் ஓமின் விதி கொடுக்கப்பட்டுள்ளது. R என்பது தடை, V என்பது வோல்ட், I என்பது மின்னழுத்தம், P என்பது மின்சக்தி ஆகும்.

Tuesday, July 3, 2012

ஓல்ட்-அம்பியர்-வாட் என்றால் என்ன?

ஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை நாம் தள்ள வேண்டும். அப்படி தள்ளுவதற்கு ஒரு போஸ் கொடுக்க வேண்டும். இப்படி எலக்ரோன்களை அசைத்துத் தள்ளுவதற்காக நாம் கொடுக்கும் போர்ஸ் (Electro Motive Force EMF) என்று சொல்வர்.
மேலே காட்டப்பட்ட படத்தில் + முனையில் போஸ் தள்ளப்பட்டதும் கோடிக்கணக்கான எலக்ரோன்கள் பல்ப் வழியாக்ச் சென்று  - முனையை அடைகின்றன. இப்படி கொடுக்கும் போஸ் இன் அளவு கொஞ்சமாக இருக்கலாம் அதிகமாகவும் இருக்கலாம். அந்த போஸ் இனை அளக்க ஓர் அளவு வேண்டும் அந்த அளவு தான் வோல்ட் ஆகும். இதன் அடையாளம "V" ஆகும்.

  1. சாதாரன சுவர்கடிகார மின்கல வோல்ட் அளவு 1.5V ஆகும். 
  2. சைக்கிள் டைனமோ 6 ஓல்ட் அல்லது 12 வோல்ட்
  3. வீடுகளில் பயன் படுத்தும் மின்சார அளவு 250 வோல்ட் வரை இருக்கும்.
  4. சில த்ரீ பேஸ் மோட்டர்களுக்கு வேண்டிய வோல்ட் 440 ஆகும்.

இப்படியாக மனிதனால் இயக்கப்படும் சாதனங்களுக்கு தேவையான வோல்ட் 1.5 இலிருந்து 1.5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இயற்கையாகவே இடி மின்னல் ஏற்படும் பொழுது பல லட்ச ல்ட்சக்கணக்கான ஓல்ட் மின்னழுத்தம் உண்டாகிறது.
மின்கலத்தின் பொசிட்டிவ் முனைக்கும் நெகட்டிவ் முனைக்குமாக மேலே காட்டப்பட்ட வோல்ட் மீட்டர் கருவியைப் பயன்படுத்தி இணைக்கலாம்.

இப்படி ஒரு மின்னழுத்தத்தை கொடுத்தது எலக்ரோன்கள் தள்ளப்பட்டதும் அவைகள் கம்பி வழியாக + இலிருந்து - இற்குச் செல்கின்றன. இந்த எலக்ரோன்களின் ஓட்டத்தத்தைத் தான் மின்னோட்டம் என்றும் (கரண்ட்) என்றும் சொல்கிறோம். அப்படியானால் எவ்வளவு கரண்ட் ஓடுகிறது என்பதையும் தெரியவேண்டியிருக்கிறது. கரண்டின் அளவு எலக்ரோன்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அப்படியானால் இந்த அளவை இத்தனை கோடி எலக்ரோன்கள் என்று சொல்லலாம், என்றாலும் இது கணக்கிடும் வகைக்கு ஏற்றதாக இருக்காது. ஆகவே இதை அளக்க "அம்பியர்" என்ற அளவு பயன்படுத்தப்படுகிறது, ஒரு கம்பியில் ஒரு அம்பியர் கரண்ட் பாய்கிறதென்றால் அதன் வழியாக 628 000, 000, 000,000,000,0 எலக்ரோன்கள் ஓடுகின்றன. அதாவது 628 கோடி கோடி எலக்ரோன்கள் ஓடுகின்றன.

இவளவு எலக்ரோன்கள் ஒரு கம்பியின் வழியாகப் பாய்வதக இருந்தால் இணைக்கப்படும் "A" என்ற அம்மீட்டர் 1 என்ற அவைக் காண்பிக்கும்.

 மின்கலத்துடன் இணைப்பை இணைத்ததும் பல்ப் வழியாக எலக்ரோன்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.  இப்படியாக மின்சாரம் ஒரு வினாடியில் ஓடும் மொத்த எலக்ரோன்களின் எண்ணிக்கையைத்தான் எலக்ரிக் பவர் என்றும் மின்சக்தி என்றும் சொல்கிறோம். இதன் அளவைத்தான் வாட் என்கிறோம். அதாவது இணைக்கப்பட்டிருக்கும் பல்ப் மொத்தம் எவ்வளவு மின்சக்தியை ஒரு வினாடியில் எடுத்திருக்கும் அல்லது மின்கலம் எவ்வளவு எலக்ரோன்களை ஒரு வினாடியில் கொடுத்திருக்கும் என்பதைத்தான் வாட்ஸ் என்கிறோம். எவ்வளவு வாட்ஸ் என்பது கொடுக்கும் மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் நேர்விகிதாசாரமாகும். ஆகவே மின்சக்தியைக் கணக்கிட மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் பெருக்கிப் பார்க்க வேண்டும்.

1000 வாட்ஸ் ஒரு யூனிட் ஆகும். அதாவது ஒரு 100 வாட் பல்ப் 10 மணி நேரம் வேலை செய்தால் 1 யூனிட் ஆகும் அல்லது 1000 வாட்ஸ் கீட்டர் ஒரு மணி நேரம் வேலை செய்தால் 1 யூனிட் செலவாகும் எனக்கொள்ளலாம்.  அல்லது 10 வோல்டும் 10 அம்பியரும் கொடுக்கக் கூடிய மின்கலத்தில் 100 வாட்ஸ் பல்பை தொடர்ச்சியாக 1 மணி நேரம் எரிய விடலாம் அல்லது 50 வாட்ஸ் பல்பை இரண்டு மணி நேரம் எரிய விடலாம்.







Monday, July 2, 2012

பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர்

ரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன்ரோல், பேஸ்-ட்ரிபிள் கன்ரோல், என்றும் டிவி களில் பிரைட்னெஸ் கன்ரோல், கொன்ராஸ்ட் கன்ரோல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

  இதில் மூன்று முனைகள் இருக்கும். இறுதியாக உள்ள முனைகளுக்கிடையே ரெஸிஸ்ரரின் தன்மை  ஸ்திரமாக அமைக்கப்பட்டிருக்கும். முனை அந்த ஸ்திரமான ரெஸிஸ்ரர் பக்கத்தில் தொட்டுக்கொண்டே இருக்கும். இதன் மூலம் அஜஸ்ட் செய்து ரெஸிஸ்ரரின் மதிப்பில் என்ன அளவு வேண்டுமோ அதை பெற்றுக்கொள்ளலாம். இந்த ரெஸிஸ்ரர்களின் மதிப்பு 5ஓம் இலிருந்து 10 லட்சம் ஓம்ஸ் வரை கிடைக்கின்றன.

இந்த ரெஸிஸ்ரர் களில் இரண்டு வகை இருக்கின்றன.
  1. லீனியர் டைப்
  2. லொக் டைப் (Log Type)
 லீனியர் டைப் என்றால் இதன் தடை தன்மை சம தூரத்தில் சம அளவிலேயே கூடிக்கொண்டே போகும். லொக் டைப் (Log Type) இல் சம தூரத்தில் தடை தன்மை லொக் அளவில் கூடிக்கொண்டே போகும். (லொக் அளவு என்பது 10 மடங்கு விகிதாசாரத்தில் அதிகரிக்கும்). ரெஸிஸ்ரரின் மதிப்பு சம தூரத்தில் 100ஓம்-1000ஓம்-10,000ஓம்-1 லட்சம் ஓம்-10 லட்சம் ஓம் என பத்து மடங்கு விகிதாசாத்தில் அதிகரிக்கும். நமது காதின் அமைப்பில் ஒரு அதிசய குணம் ஒன்று உள்ளது. ஒரு சத்தத்தின் அளவை 1 மடங்கிலிருந்து 2 மடங்காகக் கேட்கவேண்டுமானால் அச்சத்தத்தை உண்டுபண்ணும் சத்தக்கருவி உற்பத்தி செய்யும் அளவை 10 மடங்காக அதிகரிக்க வேண்டும். 3 மடங்காக கேட்கவேண்டுமானால் சத்த அளவை 100 மடங்காக அதிகரிக்க வேண்டும்.  உதாரணமாக 100 வாட்ஸ் ஸ்பீக்கரில் பாடல் ஒலித்தால் அதனை இரண்டு மடங்காக கேட்க 300 வாட்ஸ் வரை அதிகரிக்கவேண்டும். இதனையே லொக் ஸ்கேல் எங்கின்றனர். இவ்வாறில்லாமல் 200 வாட்ஸ் என்றாலேயே நம்காதால் இரண்டுமடங்கு சத்தத்தை நம் காதால் கேட்ககூடியவாறு இருந்திருக்குமானால் கொழும்பில் உண்டாகும் சத்தத்தை யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கேட்க நேரிடும்! லொக் ஸ்கேல் அடிப்படையில் நம் காதை அமைத்த ஆண்டவனை வணங்குவோம் ஏன் எனில், அருகில் இருப்பவர் கதைப்பது எவ்வாறு கேட்கும் யோசித்துப்பாருங்கள்?

ஒரு ரேடியோவில் உள்ள நிகழ்ச்சிகளை காதின் லொக் ஸ்கேல் இற்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ இந்த இரண்டாவது வகை ரெஸிஸ்ரரை தான் பயன்படுத்த வேண்டும். லீனியர் டைப் பயன்படுததினால் இரு குறிப்பிட்ட தூரம் வரை சத்தம் கூடும் அதன் பின் வித்தியாசத்தை எம்மால் உணர முடியாது.

Sunday, July 1, 2012

கார்பன் ரெஸிஸ்ரர்கள்

கார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும்.  ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் "கார்பன்"(கரி) மிகவும் பிரதானமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, 102 மூலப் பொருட்களில் காபன் 6 என்ற அணு எண்ணைக் கொண்ட எலிமென்ட் ஆகும். ஒரு மண்ணெணை விளக்கிலிருந்து வரும் புகையை ஒரு கண்ணாடியில் படும்படி வைத்துக்கொண்டால் அந்தப் புகைப்படலம் ஒரு நல்ல கார்பனாக அமையும். இதோடு சிறிதளவு கண்ணாடி, பேக்லைட் சேர்த்துவிட்டால் அது ஒரு நல்ல கார்பன் ரெஸிஸ்ரராக அமைந்துவிடும். கார்பன் ரெஸிஸ்ரர்கள் 0.25, 0.5, 1, 5 வாட் வரை கிடைக்கின்றன. இவற்றின் மதிப்பு அப்படியே அதன் மேல் 100ஓம், 1000ஓம் என குறிப்பிடப்படுவதில்லை. அதற்கு பதிலாக பல வண்ணங்களில் ஒரு ஓரமாக 3 மோதிரங்கள் போல் கோடிட்டு அதன் மதிப்பை தெரிவிக்கிறார்கள்.

 முதல்  மூன்று வளையங்கள் தான் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் அதனை அடுத்துள்ளவை தங்கக் கோடு 5%  அல்லது வெள்ளிக்கோடு 10%. இதை "டாலரன்ஸ் கலர்"  என்றும் சொல்வர்.
உதாரணத்துடன் பல ரெஸிஸ்ரர்கள்  மதிப்பை எப்படி கணக்கிடுவது என கவனியுங்கள். முதல் வட்டம் என்ன என கவனியுங்கள். அந்த வண்ணத்திற்குரிய எண்ணை அந்த ரெஸிஸ்ரரின் முதல் அளவாகவும், மூன்றவது வண்ணத்திறகுரிய எண்ணிற்கு ஏற்ப முதல்  இரு எண்களையும் அடுத்து அத்தனை பூஜ்யங்களையும் சேர்த்து மொத்தமாக பார்த்து அறிந்து கொள்ளவேண்டியதுதான்.

முதல் வட்டம் சிகப்பு வண்ணமாக இருந்தால் 2என குறிக்கவும், 2வது வட்டம் பச்சை வண்ணமாக இருந்தால் அதற்குரிய எண் 5யும் சேர்த்துக்கொண்டால் 25 என்று ஆகிவிடும். அதை அடுத்து 3வது வண்ணமாக ஒரேஞ்ச் இருந்தால் அத்ற்கேற்ப மூன்று பூஜ்யங்களை சேர்துதுக்கொண்டால் 25,000ஓம்ஸ் என கிடைத்துவிடும். ஆயிரம் என்ற எண்ணை மெற்றிக் முறையில் கிலோ என சொல்கிறோம். ஆகவே இதன் தடை மதிப்பு 25K ஓம்ஸ் ஆகும்.

எந்த ரெஸிஸ்ரரிலும் முன்னும் பின்னும் கறுப்பு வண்ணம் இருந்தால் அத்ற்கு மதிப்பு எதுவும் கொடுக்காமல் நடுவிலுள்ள வண்ணத்திற்குரிய மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 11 ஓமிலிருந்து 99ஓம் வரை உள்ள இரு ஸ்தான் மதிப்புள்ள ரெஸீஸ்ரர்களின் கடைசி வண்ணம் கறுப்பாகவும், 1லிருந்து 9 ஓம் வரையுள்ள ஒரு ஸ்தானரெஸிஸ்ரர்களில் மதிப்பு முதல் வண்ணமும் கடைசி வண்ணமும்  கறுப்பாக இருக்கும்.

சில ரெஸீஸ்ரர்களீல் கடைசி வண்ணம் வண்ணமாக இருப்பதற்கு பதிலாக வெள்ளி அல்லது தங்க வளையம் இடப்பட்டிருக்கும். இது வெள்ளியாக இருந்தால் முதல் இரு வளையங்களிக்குரிய மதிப்பை 100 ஆல் வகுத்து கொள்ள  வேண்டும். தங்கமாக இருந்தால் முதல் இரு வளையங்களுக்குரிய மதிப்பை 10ஆல் வகுத்துக் கொள்ளவும்.

தங்ககோடோ வெள்ளி  கோடோ இல்லாமல் காலியாக விடப்பட்டிருந்தால் அதன் மதிப்பு 20% கூடும் அல்லது குறையும் என்று பொருள்.

Saturday, June 30, 2012

ரெஸிஸ்டர்கள்

ஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும்.

சில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்துவிட்டால் அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ்  அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்துகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன.

Wire Wound
வயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத்தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைபபொறுத்து அதன் தடைத் தன்மை கூடிவிட்டது, இன்னும் 1000ஓம்ஸ் 2000ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200அடி 300அடி என எடுத்துக்கொண்டு ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000  ஓம்ஸ் கிடைக்கும்.


Wire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தபபடுகிறது.  அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மின்சக்தியும் அதிக அளவில் செலவாகுமாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன.

அடுத்த பதிவில் கார்பன் ரெஸிஸ்ரர்கள் பற்றி பார்க்கலாம்.

Friday, June 29, 2012

Conductor மின்னைச் செலுத்துதல்

கண்டக்டர்
மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் "கண்டக்டர்" என்றும் "கடத்தி" என்றும் சொல்லப்படுகிறது, எந்தப்பொருளின் அணுக்களில் எலக்ரோன்கள் அதிக எண்ணிக்கையிலும் அவைகள் சுறறும் வேகமும் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பொருட்களெல்லாம் நல்ல கண்டக்டர்களாகும்.  இந்த அடிப்படையில் வெள்ளி தான் சிறந்த கண்டக்டர் ஆகக் கருதப்படுகிறது,  அதை அடுத்து செம்பு அல்லுமினியம் நாகம் என்ற வாரிசையில் செல்கின்றன. அதாவது எந்த ஒரு கண்டக்டரும் மின்னோட்டத்திற்கு ஓரளவு எதிர்ப்பைக் கொடுக்கும்.
இந்த எதிர்புத்தன்மையை ஆங்கிலத்தில் "ரெஸிஸ்ரன்ஸ்" என்றும் அதனுடைய அளவை "ஓம்" என்ற அளவிலும் சொல்கிறார்கள். வெள்ளி 10ஓம் எதிர்ப்பைக் கொடுத்தால் செம்பு 15ஓம் என்றும் அலுமினியம் 20ஓம் என்றும் நாகம் 25ஓம் என்றும் பொருளைப் பொறுத்து எதிர்ப்புத்தன்மை கூடும் அல்லது குறையும்.

மின்சாரம் செல்லும் கண்டக்டரின் நீளம் அதிகமாக ஆக எதிர்ப்புத்தன்மையும் அதிகமாகும். 100 மீட்டர் நீளமுள்ள கம்பி 50ஓம் எதிர்ப்பு கொடுத்தால் 200மீட்டர் நீளமுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்பு கொடுக்கும். ஆகவே ரேடியோ வயரிங்க் செய்யும் போது முடிந்தளவு குறுகிய வயரைப் பயன்படுத்த வேண்டும்.
அடுத்தபடியாக கம்பியின் பருமனைபபொருத்தும் அது கொடுக்கும் எதிர்ப்புத்தன்மை கூடவோ குறையவோ அமையும். பருமன் அதிகமாக ஆக எதிர்ப்புத் தன்மை குறையும்  காரணம் அதன் வழியாக இலகுவாக எலக்ரோன்கள் பாயமுடியும். கம்பியின் பருமனை "கேஜ்" என்ற அளவில் சொல்லப்படுகிறது.  0 கேஜ் அளவுள்ள கம்பியின் பருமன் ஏறத்தாள 8மி.மீட்டர் பருமனும் 10கேஜ் பருமனுள்ள கம்பியின் பருமன் 3மி.மீட்டரும் இருக்கும். கம்பியின் கேஜ் எண் அதிகமாக ஆக பருமனின் அளவு குறைந்து செலவதைக்கவனிக்கவும்.  ஆகவே 10கேஜ் அளவுள்ள கம்பி 10ஓம் எதிர்ப்புக்கொடுத்தால் 40கேஜ் அளவுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்புக்கொடுக்கும்.

ஆனால் இந்த அளவு சிறிதளவே மாற்றம் கொடுப்பதால் இதனை பெரிதக கொள்வதில்லை. ஒரு கம்பி மின்னோட்டத்திற்கு கொடுக்கும் எதிர்ப்பை "ஓமிக் ரெஸிஸ்ரன்ஸ்" என்பர். இந்த குறிப்பை R என்ற ஆங்கில எழுத்தாலும் குறிக்கின்றனர்.

Thursday, June 28, 2012

மின்சார உற்பத்தி முறை-2

உராயதல்

 ஒரு அரக்குத்துண்டை பட்டு வேட்டியின்மேல் உராய்ந்தால்  அரக்குத்துண்டு பட்டுவேட்டியிலிருந்து எலக்ரோன்களை இழுத்து அடக்கிக்கோள்ளும் இதுபோல்  கண்ணாடி அம்பர், மெழுகு, ப்ளானல், நைலோன் போன்ற போருட்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்தாலும் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குள் எலக்ரோன்கள் குவிந்துவிடும் இம் மின்சாரத்தை ஸ்ரடிக் எலக்ரிசிற்றி என்கின்றனர்.
இரசாயன முறை
ஒரு கண்ணடிப்பாத்திரத்தினுள் புளிப்புக்கொடுக்கக்கூடிய ஒரு கரைசலை ஊற்றி இரு வேறுபட்ட உலோகங்களை அதனுள் மூழ்கினால் ஒரு எலக்ரோடிலிருந்து மறு எலக்ரோடு வழியாக மின்னோட்டம் பாயும். எலுமிச்சம் பழச்சாறு, புளித்தண்ணீர், மாட்டுச்சாணம் போன்றவற்றை இக் கரைசலுக்கு உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் இவற்றில் அதிக மின்னழுத்தம் கிடைக்காது. பதிலாக சில அமிலங்ளை உபயோகப்படுத்தினால் மின்னழுத்தம் அதிகம் கிடைக்ககும். உப்புக்கரைசலில் ஒரு கரித்துண்டையும், நாகத்தகட்டையும் மூழ்க்கினால் காரித்துண்டிலிருந்து எலக்ரோன்கள் இழுக்கப்படும் நாகத்தகடடில் கொண்டுபோய் குவித்துவிடும். கரி எலக்ரோன்களை குவித்துவிடுவதால் அது பொசிட்டிவாகவும் நாகத்தகட்டில் எலக்ரோன்கள் குவிவதால் அது நெகட்டிவ் ஆகவும் அமைந்துவிடுகிறது.


மின்சார உற்பத்தி முறை

கடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம்.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு முனையிலிருந்து அணுவிலுள்ள எலக்ரோன்களைத் தள்ள வேண்டும். எப்படி எலக்ரோன்கள் தள்ளப்படுகின்றன? அதாவது மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனத்தெரிந்து கொள்ள்வோம். உஷ்ணம், ஒளி, அழுத்தம், உராய்தல், இரசாயன  முறை, காந்தத்தூண்டுதல் போன்ற முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்டுகின்றது.


உஷ்ணம் (Heating)
பொதுவாக உலோகக் கம்பிகளை சூடுபடுத்தும் போது அவை விரிவடைவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகங்கள் சூட்டைப் பெற்றதும் எலக்ரோன்கள் தாங்கள் சுழலும் பாதையை விரிவுபடுத்திக்கொள்கின்றன ஆகவேதான் அப்பொருள் சூட்டைப்பெற்றதும் விரிவடைகிறது.  ஒரு கம்பியின் நடுவே சூடுபடுத்தும் போது எலக்ரோன்கள் குளிர்ந்த இடமாகிய இரு முனைகளையும் அடைகின்றன. ஒரு செம்பு தகட்டின் நடுவே சூடுபடுத்தும்போது இரு ம்முனைகளும் எம்பாகவே இருப்பதால் இருமுனைகளிலும் 1000 கோடி எலக்ரோன்கள் இருப்பதாகக் கொள்வோம். சூடுபடுத்தப்பட்ட இடத்திலிருந்து 300 கோடி எலக்ரோன்கள் இருமுனைகளையும் நோக்கிப் பாய ஆரம்பிக்கும். இரு முனைகளையும் ஒரு தகட்டின் மூலம் இணைப்பதால் இரு முனைகளிலிருந்தும் சரிக்கு சரியான அளவில் எலக்ரோன்கள் பாய்வதால் மின்னோட்டம் எதுவும் பாயாது.  செப்பு தகட்டின் நடுபகுதியை இரண்டாக துண்டித்து மறுபகுதில் இருந்த செப்பு தகட்டிற்கு பதிலாக துத்த நாகத்தையும் இணைத்து இரண்டையும் முக்கோண வடிவில் வைத்து கூர்முனைகளை ஒன்றாக சூடுபடுத்தினால் செம்பு தகட்டில் 300 கோடி எலக்ரோன்களும்  நாகத்தில் 100 கோடி எலக்ரோன்களும் போய்ச்சேரும்.

இதனை "த்ர்மோ கப்பிள் சிஸ்ரம்" என்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் மின்னழுத்தின் அளவு 6-8 Volt என இருக்கும். தகட்டின் பருமன் அகல நீளம், உஷ்ண அளவு ஆகியவற்றை  பொறுத்து மாறுபடும்.

ஒளி (Lighting)
சோடியம் பொட்டாசியம் போன்ற பொருட்களை இருட்டில் வைத்திருந்தால் அவைகளின் அணுக்களிலுள்ள எலக்ரோன்கள் உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல் ஒளியை படச்செய்தால் உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ரோன்கள் வெளிக்கிளம்பிவிடும்.  இவை போட்டோ சென்சிட்டிவ் மெட்டீரியல்ஸ் எனப்படுகின்றன. இப் பொருட்கள் எலக்ரோன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அழுத்தம் (Pressure)
சில குவாட்ஸ், கிரிஸ்டல், ரோக்சிலே சால்ட் போன்ற பொருள் மேல் மெக்கானிக்கல் முறையில் அழுத்தம் கொடுத்தால் அவற்றின் இரு முனைகளிலும் மின்னோடம்  பாய ஆரம்பிக்கும்.
மேலும் உராய்தல் மற்றும் இரசாய முறையில் மின்சார உற்பத்தி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, June 27, 2012

Electrical மின்சாரம் பற்றிய பார்வை

 நாம் ஒரு நாளில் பயன்படுத்தும் 90% மான பொருட்கள் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களாகவே காணப்படுகிறது,  இவ்வாறு இருக்கும் வேளையில் நமது அத்தியாவசிய தேவையாகிய மின்சாரத்தைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது,

எலக்ராங்கள் மற்றும் புரோட்டங்களின் ஓட்டமே மின்சாரம் எனப்படுகிறது, இரும்பு , செம்பு, அலுமினியம், வெள்ளி, பிளாட்டினம், சிலிக்கன் என்பன மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய பொருட்களாகும்.  இதுவரை உலகிலே 103 (2012) வகை வெவேறு விதமான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்கான எலக்ரோங்களும் புரோட்டன்களும்  சம எண்ணிக்கையில் அமைந்துள்ளன.  இந்த அணுவிலுள்ள எலக்ரோன்களின் நகர்வே மின்சாரம் எனப்படுகிறது, மின்சார நகர்வின் வேகமானது நொடிக்கு சுமார் 3லட்சம் கிலோமீட்டர்களாகும். இதனால் தான் மின்சாரத்தை இவ்வளவு வேகமாக வயர்கள் மூலமாக எடுத்துச் செல்ல  முடிகிறது,

மின்சாரமானது இரண்டுவகைகளாகப் பிரிக்கப்படுகிறது
  • AC மின்சாரம் Alternating current
  • DC மின்சாரம Direct Current 
 
 நமது வீட்டிற்கு வரும் மின்சாரம் 240 வோல்ட் ஏசி 50Hz மின்சாரமாகும்.  பாரிய தொழ்ற்சாலைகளுக்குக் கொடுப்பது 420 வோல்ட் ஏசி மின்சாரமாகும்.

அடுத்த பதிவுகளில் மின்சார உற்பத்தி முறை பற்றி பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்வையிடுங்கள்...

Saturday, March 24, 2012

RFID தகவல் தொடர்பாடல் ஒரு பார்வை


RFID என்ற தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம். Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும்.  இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும்.

RFID இனுடைய அடிப்படைச்சுருக்கம்
தமிழில், வானொலி அதிர்வெண் அடையாளம் என்றைழைக்கப்படும் நுட்பம் (கருவி) தனக்கு கொடுக்கப்பட்டுள்ள Programe இற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு  வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.

இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980  களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.

RFID எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது.  இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency  பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது  அனைத்துவகையான Tag களிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

RFIDஇல் Tags எவ்வாறு வேலைசெய்கின்றன?
        பொதுவாக இவை இரண்டுவகைப்படுகின்றன.
  •                                   Passive Tags
  •                                   Active Tags
 Passive tags ஆனவை எல்லாநேரங்களிலும் Reciever உடன் தொடர்பில் இருக்காது. தேவை ஏற்படும் போது மாத்திரம் அல்லது நாம் பயன்படுத்தும் போது மட்டும் இயங்குகின்ற. இதற்கு உதாரணமாக வியாபார நிலையங்களில் விற்பனை பொருட்களில் உத்தரவாத அட்டைகளில் பயன்படுகின்றன. இவற்றிலும் இரண்டுவகைகள் உள்ளன Class0 என்பவை Send only மற்றயவை Class1 இவை Send/Write ஆகிய இரண்டையும் செய்கின்றன.

RFIDஇல் Readers எவ்வாறு வேலைசெய்கின்றன?
Reader ஆனது குறித்த தூர அளவில் வானொலி அலையூடாக tag இலிருந்து அனுப்பப்படும் தகவலை அறிகிறது இவ்வேளை  ஒரே அலைஎண்ணையுடைய இரு tags காணப்பட்டாலும் தனக்குரியதுடன் மாத்திரம் தொடர்பை பேணுவதர்காகவே இங்கு தனித்தனியான Protocol பயன்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எவ்வாறு இருக்கும் என பார்த்தால்.. வியாபாரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பார்கோட் இற்கு பதிலா இது அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் கண்காணிப்பு மற்றும் தொடர்பதிவுகளை மேற்கொள்ளும் துறைகளில்  இதன் ஆதிக்கம் அதிகரிக்கும் எனலாம்.

RFID எவற்றில் அதிகம் பயன்படுகிறது?
  • சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் கைகளில் இதை பொருத்திவிட்டால் அவர்கள் தப்பிவிடாதவாறு பார்க்கமுடியும்
  • விமானங்களின் Passport இல் பொருத்தப்பட்டுள்ளதால் அவர்களையும் அவதானிக்க முடியும்.

  • இரத்தவங்கிகளில் வேகமாக என்னவகை இரத்தம் இருப்பில் உள்ளது என்னவகை இரத்தம் தேவை என தீர்க்கமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு பயன்படுகிறது.

Saturday, March 17, 2012

கேள்வி பதில்

சந்தோசம் ஜசுநேசன்
sjesunesan@live.com


கேள்வி
பேஜ்மேக்கர் பற்றிய தமிழ் நூலை இணையத்தில் எங்கு தரவிறக்கலாம்?
 
 பதில்
இணையத்தில் பேஜ்மேக்கர் பற்றிய பல நூல்கள் உள்ளன.
http://downloads.ziddu.com/downloadfile/12725568/pagemaker7.pdf.html
இது 83 பக்கங்களை உடைய முழுமையான நூலாகும்.

கேள்வி பதில்

Jameel Siyath
siyaathweb@gmail.com


கேள்வி
  1. Dialog Broadband இனை Hack செய்ய முடியும?
  2. ICT வினாக்கள் (Pastpaers) தரமுடியுமா?

பதில்
     1..Siyath அவர்களே Dialog Broadband மட்டுமல்ல இதுபோன்ற வேறு எந்த சேவை நிறுவனங்களையும்  சாதாரணமாக Hack செய்துவிட முடியது.  காரணம் அவர்கள் சக்தி வாய்ந்த Hardware and Software Firewall  இனை  அமைத்திருப்பார்கள். அவர்களுடைய தகவல்கள் கடவுச்சொற்கள்  அனைத்தும் மறையாக்கம் செய்தே கையாளப்படும்.


      2.ICT வினா Pastpapers மட்டுமல்ல உங்கள் தேவைக்கேற்ப அனைத்து பாடங்களின் Pastpapers Download செய்யலாம். 

Thursday, March 8, 2012

எமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்

பொதுவாக இணைய வசதி உள்ள கணினியிலேயே மின்னஞ்சலைப்பயன் படுத்திட முடியும் இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இவ்வாறான தேவைகள் ஏற்படலாம்.

இந்த மென்பொருளின் பெயர்தான் Zimbra Desktop என்பதாகும். இந்த 92 MB அளவுடைய மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மினஞ்சல்களை படிக்கலாம்.




இதன் எத்தற்காக எவ்வாறு பயன்படுத்துவதெனில் NetBrowsing Center இற்குச்சென்று குறைந்த நேரத்தில் மின்னஞ்சல் களை Pendrive இனுள் சேமித்து வீட்டில் பயன்படுத்தலாம். 



முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.

Saturday, January 28, 2012

அதிரவைக்கும் புதிய நினைவக தொழில்நுட்பம்

எம்மை அதிரவைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் சில  காலங்களில் வர இருக்கிறது. வர இருக்கும் இத் தொழில்நுட்பங்கள் RAM களில்லேயே மாற்றங்களை ஏற்படுத்தப்போன்றன. இதுவரை DDR3 வகைகளே பாவனையில் உள்ளன அடுத்த தலைமுறைக்கான DDR4 RAM கள் முன்னையவற்றைக்காட்டிலும் மிக அதிவேகமானதாகவும், அதிக கொள்ளளவை ஏற்கக்கூடியதாகவும் வெளிவார உள்ளன. இதுவரை வெளியாகிய Memory RAM  களிலிருந்து இயக்க முறையில் இவை முற்றிலும்  வேறுபட்டுக்காணப்படுகின்றன.

இவற்றின் நினைவகப்பகுதியில் Memristors (நினைவுகொள் மின்தடை) என்ற மின்னுறுப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 2008 இல் HP  நிறுவனத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை இலத்திரனியல் வரலாற்றில் அடிப்படையாக இருந்த Inductor, Resistor, capacitor என்ற மூன்று மின்னுறுப்புக்களே அடிப்படையாக இருந்தன தற்போது இது நான்காவது உறுப்பாகக்காணப்படுகிறது எனலாம். Resistor களில் கால நேர அளவில் மின்னோட்ட, மின்னழுத்தங்களீல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. இதில் resistive memory தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவதனால் SDRAM நீக்கப்பட்டு RRAM (Resistive RAM) என மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் முதலில் RAM களிலேயே ப்பயன்படுத்தப்படுகிறது காரணம் இவை தற்காலிய நினைவகம் என்பதனாலே ஆகும். எனினும் விரைவில் பெண்டிரைவ் களிலும் SSD களிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 ரம்கள் 2400Mhz வேகத்தில் உள்ளன DDR4  4266 Mhz வேகத்தில் இயங்கக்கூடியது எனப்படுகிறது. மேலும் DDR3 ரம்கள் 32GB வரையே அதிகரிக்ககூடியதாகும் DDR4 அவற்றில் காட்டிலும் சக்திவாய்ந்ததாக காணப்படும். ஆனால் 2GB ரம்இலேயே நமது வேலைகளை தடங்கல் இல்லாமல் செய்யகூடியதய்  இருப்பினும் திரைப்பட தயாரிப்புக்களுக்கு இவை அதிரவைக்கும் ஒளி ஒலி வடிவங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமையும் என்பது உண்மையே. 

Friday, January 13, 2012

திரையை அளப்பதற்கு அடிமட்டம் மென்பொருள்

கணினியில் சில தேவைகளுக்காக  திரையை அளக்க வேண்டிய தேவை ஏற்படலாம். உதாரணமாக பேஜ்மேக்கர், போட்டோசோப், இணையத்தில் உலாவும் போது படங்களை அளத்தல் போன்ற தேவைகளின் போது வேலையை இலகுபடுத்த ஒரு நல்ல மென்பொருள்.
டவுன்லோட் செய்ய click Here!
Related Posts with Thumbnails