Thursday, June 28, 2012

மின்சார உற்பத்தி முறை-2

உராயதல்

 ஒரு அரக்குத்துண்டை பட்டு வேட்டியின்மேல் உராய்ந்தால்  அரக்குத்துண்டு பட்டுவேட்டியிலிருந்து எலக்ரோன்களை இழுத்து அடக்கிக்கோள்ளும் இதுபோல்  கண்ணாடி அம்பர், மெழுகு, ப்ளானல், நைலோன் போன்ற போருட்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்தாலும் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குள் எலக்ரோன்கள் குவிந்துவிடும் இம் மின்சாரத்தை ஸ்ரடிக் எலக்ரிசிற்றி என்கின்றனர்.
இரசாயன முறை
ஒரு கண்ணடிப்பாத்திரத்தினுள் புளிப்புக்கொடுக்கக்கூடிய ஒரு கரைசலை ஊற்றி இரு வேறுபட்ட உலோகங்களை அதனுள் மூழ்கினால் ஒரு எலக்ரோடிலிருந்து மறு எலக்ரோடு வழியாக மின்னோட்டம் பாயும். எலுமிச்சம் பழச்சாறு, புளித்தண்ணீர், மாட்டுச்சாணம் போன்றவற்றை இக் கரைசலுக்கு உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் இவற்றில் அதிக மின்னழுத்தம் கிடைக்காது. பதிலாக சில அமிலங்ளை உபயோகப்படுத்தினால் மின்னழுத்தம் அதிகம் கிடைக்ககும். உப்புக்கரைசலில் ஒரு கரித்துண்டையும், நாகத்தகட்டையும் மூழ்க்கினால் காரித்துண்டிலிருந்து எலக்ரோன்கள் இழுக்கப்படும் நாகத்தகடடில் கொண்டுபோய் குவித்துவிடும். கரி எலக்ரோன்களை குவித்துவிடுவதால் அது பொசிட்டிவாகவும் நாகத்தகட்டில் எலக்ரோன்கள் குவிவதால் அது நெகட்டிவ் ஆகவும் அமைந்துவிடுகிறது.


No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails