Thursday, June 28, 2012

மின்சார உற்பத்தி முறை

கடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம்.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு முனையிலிருந்து அணுவிலுள்ள எலக்ரோன்களைத் தள்ள வேண்டும். எப்படி எலக்ரோன்கள் தள்ளப்படுகின்றன? அதாவது மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனத்தெரிந்து கொள்ள்வோம். உஷ்ணம், ஒளி, அழுத்தம், உராய்தல், இரசாயன  முறை, காந்தத்தூண்டுதல் போன்ற முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்டுகின்றது.


உஷ்ணம் (Heating)
பொதுவாக உலோகக் கம்பிகளை சூடுபடுத்தும் போது அவை விரிவடைவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகங்கள் சூட்டைப் பெற்றதும் எலக்ரோன்கள் தாங்கள் சுழலும் பாதையை விரிவுபடுத்திக்கொள்கின்றன ஆகவேதான் அப்பொருள் சூட்டைப்பெற்றதும் விரிவடைகிறது.  ஒரு கம்பியின் நடுவே சூடுபடுத்தும் போது எலக்ரோன்கள் குளிர்ந்த இடமாகிய இரு முனைகளையும் அடைகின்றன. ஒரு செம்பு தகட்டின் நடுவே சூடுபடுத்தும்போது இரு ம்முனைகளும் எம்பாகவே இருப்பதால் இருமுனைகளிலும் 1000 கோடி எலக்ரோன்கள் இருப்பதாகக் கொள்வோம். சூடுபடுத்தப்பட்ட இடத்திலிருந்து 300 கோடி எலக்ரோன்கள் இருமுனைகளையும் நோக்கிப் பாய ஆரம்பிக்கும். இரு முனைகளையும் ஒரு தகட்டின் மூலம் இணைப்பதால் இரு முனைகளிலிருந்தும் சரிக்கு சரியான அளவில் எலக்ரோன்கள் பாய்வதால் மின்னோட்டம் எதுவும் பாயாது.  செப்பு தகட்டின் நடுபகுதியை இரண்டாக துண்டித்து மறுபகுதில் இருந்த செப்பு தகட்டிற்கு பதிலாக துத்த நாகத்தையும் இணைத்து இரண்டையும் முக்கோண வடிவில் வைத்து கூர்முனைகளை ஒன்றாக சூடுபடுத்தினால் செம்பு தகட்டில் 300 கோடி எலக்ரோன்களும்  நாகத்தில் 100 கோடி எலக்ரோன்களும் போய்ச்சேரும்.

இதனை "த்ர்மோ கப்பிள் சிஸ்ரம்" என்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் மின்னழுத்தின் அளவு 6-8 Volt என இருக்கும். தகட்டின் பருமன் அகல நீளம், உஷ்ண அளவு ஆகியவற்றை  பொறுத்து மாறுபடும்.

ஒளி (Lighting)
சோடியம் பொட்டாசியம் போன்ற பொருட்களை இருட்டில் வைத்திருந்தால் அவைகளின் அணுக்களிலுள்ள எலக்ரோன்கள் உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல் ஒளியை படச்செய்தால் உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ரோன்கள் வெளிக்கிளம்பிவிடும்.  இவை போட்டோ சென்சிட்டிவ் மெட்டீரியல்ஸ் எனப்படுகின்றன. இப் பொருட்கள் எலக்ரோன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அழுத்தம் (Pressure)
சில குவாட்ஸ், கிரிஸ்டல், ரோக்சிலே சால்ட் போன்ற பொருள் மேல் மெக்கானிக்கல் முறையில் அழுத்தம் கொடுத்தால் அவற்றின் இரு முனைகளிலும் மின்னோடம்  பாய ஆரம்பிக்கும்.
மேலும் உராய்தல் மற்றும் இரசாய முறையில் மின்சார உற்பத்தி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

3 comments:

  1. உராய்தல் முறையா? உரோஞ்சும் முறை தானே? Eg: பட்டு-கண்ணாடி , பெர்பெக்ஸ்-கம்பளி

    ReplyDelete
  2. உங்கள் தமிழ் உங்களுக்கு மட்டுமே புரியட்டும்
    Yowww naalu peru pathu purunjukanumna nadai murai tamil la poduya

    ReplyDelete

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails